முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்தாளர் பெருந்தேவியுடனான சந்திப்பு

  காலையில், எழுத்தாளர் பெருந்தேவியைச் சந்திக்கும் திட்டத்தை லதா சொன்னார். பெருந்தேவி முகநூலில் இருந்த சமயத்தில் அவருடைய கவிதைகளையும் உடல் அரசியல் பால் தொடரின் சில பகுதிகளையும் வாசித்திருக்கிறேன். ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் மாடியின் கடைசி வீட்டுக்குள் எங்களைப் பெருந்தேவி அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் நுழைந்ததும், கணநேரம் எதாவது பேசிக்கொள்ளாமல் எங்களையே வெறித்துப் பார்த்தார் பெருந்தேவி. பேச்சிலும் பார்வையிலும் கனிவுடன் ஒவ்வொன்றாக விசாரித்துக் கொண்டிருந்தார். மதிய உணவு சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டுமெனச் சொல்லியிருந்தார். அவருடைய வீட்டைப் பார்த்த மாதிரியாக சக்கரை அம்மா எனும் 19 ஆம் நூற்றாண்டு சித்தர் கோவில் இருப்பதையும் சொன்னார். திரு.வி.க போன்றவர்கள் கூட சக்கரை அம்மாவின் ஆற்றலைக் கண்டு பேசியிருக்கிறார்கள் எனச் சொன்னார். மிளகு ரசம், பருப்புத் துவையலுடன் நெய்யும் அப்பளமுமாய் தமிழ்நாட்டிலருந்த நாட்களில் மிக அருமையான உணவுகளில் ஒன்றைத் தந்தார். உணவு முடித்தப் பின், மாமல்லப்புரம் செல்லும் திட்டத்தைச் சொன்னார்.  சென்னைக்கு வந்தால் மாமல்லப்புரம் சென்று பார்த்து...

ஏசுவின் பிறப்பு

  பயண நினைவுகளில் சில தருணங்கள் நேரில் உணர்ந்ததைக் காட்டிலும் பின்னர் எண்ணிப்பார்க்கும் போது இன்னுமே விரிவானதாகத் தெரிகிறது. 2023 டிசம்பரில் நிகழ்ந்த முதல் இந்தியப்பயணம் பற்றி எழுத வேண்டுமெனப் பலநாட்களாக எண்ணம் இருந்தது. அதில் சில தருணங்களைப் பற்றி மட்டும் எழுதிப் பார்க்கிறேன்.   மலேசியாவுக்குத் திரும்புவதற்கு இரு நாட்களுக்கு முன் தான் தஞ்சையிலிருந்து ரயிலிலே சென்னையை வந்தோம். சென்னையில் முதல் நாள், எழுத்தாளர் ம.நவீனின் தாரா நாவல் அறிமுகக்கூட்டம் நிகழ்ந்தது. அந்த நாவலை ம.நவீன் எழுதத் தொடங்கி பெயரிடுவதற்கான குறியை நேபாளத்தில் பெற்றது தொடங்கி முதல் பிரதியை வாசித்தது முதலாக உடனிருந்திருக்கிறேன். நிகழ்ச்சியில் பேசுவதற்கான குறிப்புகளை எழுத்தாளர் சு.வேணுகோபால் , நானும் நவீனும் தங்கியிருந்த விடுதி அறையில்தான் தயார் செய்தார். அறையை விட்டு எங்குமே அகலாமல் கையிலிருக்கும் புத்தகத்தை மல்லாந்தும் உட்கார்ந்தும் என மாறி மாறி வாசித்துக் கொண்டிருந்தார்.   கோவையில் விஷ்ணுபுரம் விருது விழாவில் அவரைச் சந்தித்திருந்தேன். என் பெயரை அரவிந்து…அரவிந்து எனச் சொல்லி அழைத்துப் பேசினார். விழாவின் இ...