இவ்வாண்டு வாசித்த நூல்களின் பட்டியல் 1.கூளமாதாரி 2. கழிமுகம் 3. கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை 4. சொல்லாததும் உண்மை 5. ஜுவாரா 6. ஹத்திமு ஆயிஷா 7. சலினா 8. ரஞசாவ் செபாஞ்சாங் ஜாலான் 9. மாட் லேலா கீலா 10. செம்மண்ணும் நீலமலர்களும் 11. நினைவுசின்னம் நாவல் 12. குருதிவழி 13. காச்சர் கோச்சர் 14.புத்தம் வீடு 15. கன்னி நாவல் 16. கடல்புரத்தில் 17. ஆகாயத்தாமரை 18.இன்று 19. ஒற்றன் 20. யுத்தங்களுக்கிடையில் 21அசோகமித்திரன் கட்டுரைகள் 22.இலட்சியப்பயணம் 23.`வானம் வசப்படும் 24. கர்ப்ப நிலம் 25. Harimau Jadian 26. அமுதசுரபிகள் 27. அழகான மெளனம் 28.கம்பா நதி 29. குறத்தி முடுக்கு 30. செல்சி நீலம் 31 பிரசாதம் சிறுகதைத் தொகுப்பு 32. அசோகமித்திரன் சிறுகதைகள் 33. கிளி சொன்ன கதை 34. காவியம் 35.கிராமம் நகரம் மாநகரம் 36. ஏறுவெயில் இவ்வாண்டு தொடக்கத்தில் மாதம் ஒரு மலாய் நாவல் வாசிப்பதென முடிவெடுத்திருந்தேன். வாசிக்க வேண்டிய நாவல்கள், எழுத்தாளர்கள் என மனதுக்குள்ளே சிலவற்றைத் தெரிவு செய்திருந்தேன். எல்லாமே முன்னோடி மலாய் எழ...
இவ்வாண்டுக்கான வல்லினம் விருதுக்கு மேனாள் தேர்வு வாரிய அதிகாரி பி.எம்.மூர்த்தி தேர்வு செய்யப்படுவது குறித்து எழுத்தாளர் ம.நவீன் என்னிடம் குறிப்பிட்டதும், ஒரு கேள்வி எனக்குள் எழுந்தது. அவர் வகித்த பணியைக் கொண்டுதானே அவர் பல பங்களிப்புகளைச் செய்தார் என்பதைப் போல. விருதுக்கு அவர் தேர்வு பெற்றிருக்கும் செய்தியை அவரிடம் சொல்வதற்கு நவீன் என்னையும் அழைத்திருந்தார். அதுவரையில் வல்லினம் நிகழ்ச்சியில் இரண்டொரு முறை சந்திருந்ததும் நான் அறிந்து வைத்திருந்த செய்திகளைக் கொண்டும் மூர்த்தியை மனதுக்குள்ளாக வரையறை செய்து கொண்டேன். அவர் அறிமுகப்படுத்திய படைப்பிலக்கியப் பிரிவு குறிப்பாக சிறுகதைப் பகுதி வழி ஊக்கம் பெற்ற தலைமுறையைச் சேர்ந்தவன் நான். அவரால் உரமூட்டப்பட்டு மலேசியா முழுவதும் இலக்கியப் பாடத்தை மாணவர்கள் தேர்வு பாடமாக எடுக்க துணை நின்ற ஆசிரியர் படையில் ஒருவரான குமாரி ராதாவின் தூண்டுதலாலே நானும் இலக்கியம் பாடத்தைத் தேர்வு செய்திருந்தேன். நான் எஸ்.பி.எம் தேர்வில் அமரும் ஆண்டுக்கு முன்னர்தான் கல்வி அமைச்சின் பாட வரம்பு நிர்ணயத்தால் அறிவியல் பிரிவு மாணவர்கள் தமிழ் இலக்கியம் பாடம் எடுக்க முடியா...