முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உலகக்கனவு

  நீண்ட பயணமாக இருக்குமென்பதால் வழியிலே வெண்டிஸ் பர்கர் கடையில் ஒரு கோழி சாண்ட்விச்சை வாங்கி தந்தார். இடப்பக்க ஒட்டுநர் இருக்கை, இம்பிரியல் கணக்கு என எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டும் அமெரிக்காவில் பர்கர், சாண்ட்விச் என எல்லாமே மலேசியாவைக் காட்டிலும் அளவில் பெரிதாகவே இருந்தது. வழியில் வித்தியாசமான விளம்பரப் பலகைகள் தென்பட்டன. சந்தேகத்துக்குரிய இணையரா எங்கள் தனியார் துப்பறிவாளரை நாடவும் என்று ஒரு பலகை இருந்தது. உங்கள் ஐ டி எண் நினைவில் இல்லையா..அமெரிக்க மறதொ நோய் கழகத்தில் இணையுங்கள். அதோடு வழிமுழுவதும் அழகிய சுவர் கிறுக்கல்கள் இருந்தன. எட்ட முடியாத மேம்பாலச் சுவர்களில் கூட எப்படியோ ஏறி வரைந்திருந்தனர். ஒரு எதிர்ப்பு கலையாக ( rebel) சுவர் கிறுக்கல்கள் இருப்பதாக பழனி ஜோதி குறிப்பிட்டார். வழியில் ஹட்சன் ஆற்றின் கீழ் கட்டப்பட்டிருக்கும் ஹோல்லாந்து சுரங்கத்தைக் கடந்து நியு ஜெர்சிக்கு வந்தோம். நியு யார்க்கு நேர் எதிராக நியு ஜெர்சி ஒரு மெளனத்துடன் இருந்தது. தளிருக்குக் காத்திருந்த மொட்டை மரங்களும் பருவம் பொறுக்காது பூத்துக் குலுங்கத் தொடங்கிய செர்ரி மரங்களுமாக நகரம் அழகாக இருந்தது. எனக்...
சமீபத்திய இடுகைகள்

கலைஞனின் உறுதி

  கோவிட் பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் வீட்டுக்குள்ளே எல்லாரும் முடங்கியிருந்த சூழலில்தான் சிகண்டி நாவலை நவீன் உச்சவிசையுடன் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு நாளுக்கு ஒர் அத்தியாயமென சிகண்டி நாவலை நவீன் ஊக்கத்துடன் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார். அதை முதலில் வாசிக்க நேர்ந்த ஒரு சில வாசகர்களில் நானும் ஒருவன் என்றவகையில் ஒரு இலக்கிய உபாசகனின் தரிசனத்தை அருகிலிருந்து பார்த்த அனுபவமாகத்தான் அதனைக் குறிப்பிட வேண்டும். சரியாக மதியத்துக்குள்ளாக எழுதிய அத்தியாயங்களை எனுக்கு அனுப்பிவிடுவார். அதனை உடனே வாசித்துக் குரல்பதிவாகவோ அல்லது கட்டுரையாகவோ என்னுடைய கருத்துகளை அனுப்பிவைப்பேன். அதில் உடன்பாடில்லாத சிலவற்றைக் கூட துடுக்காகக் கூறியிருக்கிறேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு அதனைப் பற்றிய எதிர்க்கேள்விகளுடன் எனக்கு அழைத்துப் பேசுவார். பல சமயங்களில் என்னுடைய எழுத்தில் இருக்கும் தெளிவு நேர்ப்பேச்சிலும் உரையாடலிலும் இருப்பதில்லை. தேவைப்படும் நேரத்தில் கைகளுக்கு எட்டாத பாதாளக்கரண்டியாகச் சொற்கள் பதுங்கி கொள்ளும். அப்பொழுதெல்லாம் நான் சொல்லும் உதிரிச் சொற்களைக் கொண்டு நான...

வன்முறையின் புதிர்பாதை

எழுத்தாளர் ஹம்சா உசேனை எனக்கு அறிமுகம் செய்தது மலாய் எழுத்தாளரும் செம்மையாக்குநருமான அஸ்ரின் பவ்ஸிதான். மலாய் நாவல் உலகில் ஹம்சா தனித்துவமானவர் எனக் குறிப்பிட்டு அவரின் நாவல்களை வாசிக்க அஸிரின் தான் பரிந்துரை செய்தார். எழுத்தாளர் ஹம்சா அப்துல் மஜிட் பின் ஹுசேன் சிங்கப்பூரைச் சேர்ந்த மலாய் எழுத்தாளர்.     இலக்கிய உலகில் ஹம்சா ஹுசேன் அல்லது பாக் எனும் பெயரிலே அறியப்படுகிறார்.    https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=11b77927-df80-4e6b-b953-d2240292abd8 ஹம்சா ஹுசேனின் வாழ்க்கைக் குறிப்பு Hamzah Hussein மலாய் இலக்கிய உலகில் மிகப் புகழ்பெற்ற முன்னோடி இலக்கிய இயக்கமான அஸாஸ் 50 (Asas 50) இல் ஹம்சா மிகத் தீவிரமாக இயங்கியிருக்கிறார். அந்த அமைப்பில் கலை கலைக்காகவா அல்லது மக்களுக்ககாவா எனும் விவாதம் எழுந்திருக்கிறது.  ஹம்சா கலை கலைக்காகத்தான் எனும் தரப்பை ஆதரித்து  அந்த அமைப்பிலிருந்தே வெளியேறியிருக்கிறார். சிங்கப்பூரில் பிரபலமாக இயங்கிய ஷா பிரதர்ஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பின்னாளில், ...

உலகக் கனவு 2

  முதல் விசா தோல்வியடைந்ததுமே பயணத்தில் இணையலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு அரை நாள் அந்தச் சிந்தனையிலே மூழ்கியிருந்தேன். மறுவிண்ணப்பம் செய்திருந்த போதும் சந்தேகம் மட்டும் தீரவில்லை. ம.நவீனிடமே ஏன் அமெரிக்கப் பயணம் முக்கியமானது எனக் கேட்டேன். அவரும் உலக அரங்கின் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் நிகழ்ச்சி ஏன் முக்கியமானது என்பதை விளக்கினார். எல்லா முயற்சிகளுக்கும் பின்னரும் அறியப்படாத ஒரு சரடு பின் தொடரச் செய்கிறது. உலக அரங்கின் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் திட்டம் உருவாகிக் கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் மற்ற இன எழுத்தாளர்கள் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் முயற்சிகளும் தீவிரமாக நடந்தன. 2025 ஆம் ஆண்டு மலாய்- சீன- தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடி உரையாடும் களமான முக்கோணக்கதைகள் நிகழ்ச்சியை வல்லினம் ஒருங்கிணைத்தது. மலேசியா சுதந்திரமடைந்து 60க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகியும் இம்மாதிரியான முயற்சிகள் பெரும்பாலும் நடந்ததில்லை. அதனை வல்லினம் உண்மையான தீவிரத்துடன் ஏற்பாடு செய்திருந்தது. தமிழிலிருந்து மலாய்க்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சிறுகதை தொக...

உலகக் கனவு

 அமெரிக்காவில் ஏப்ரல் 1 மற்றும் 2, 2026 நடந்த வாழும் தமிழ் விழா பற்றிய என் மனப்பதிவை எழுத வேண்டுமென எண்ணியிருந்தேன். அது மனப்பதிவு மட்டுமில்லாமல் குறிப்பாக, பயண அனுபவமாக விரிந்திருக்கிறது. அதனை ஒவ்வொரு பதிவாக இடலாம் என்றிருக்கிறேன். கனவு 1 2022 ஆம் ஆண்டு ஜெயமோகன் மலேசியாவுக்கு வந்திருந்தார். ஜார்ஜ் டவுன் இலக்கியத் திருவிழாவின் சிறப்பு` விருந்தினர்களில் ஒருவராக வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியை ஒட்டி கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் நூல்களின் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போதுதான், ஜெயமோகனிடம் எழுத்தாளர் ம.நவீன் தமிழினி 2000 போன்ற மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற யோசனையைச் சொன்னார். அவர் சொன்னப்போது நானும் உடனிருந்தேன். 2000 ஆம் ஆண்டு காலச்சுவடு இதழ் புத்தாயிரத்தில் தமிழிலக்கியத்தில் செல்திசையை ஒட்டி தமிழினி 2000 எனும் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. அதில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கல்வியாளர்களே கலந்து கொண்டனர். அவர்களின் கட்டுரைகளை மாநாட்டு மலரில் கண்ட போது அதன் ‘’கல்வியியல் ஆய்வுக்கட்டுரைத் ...

சீ.முவுக்கு அஞ்சலி

 ''சீ.மு ஒரு சிங்கம் மாதிரி தனித்துத்தான் இருப்பார்'' என்றுதான் எழுத்தாளர் சீ.முத்துசாமியை இலக்கிய நண்பர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். 2017 ஆம் ஆண்டு கூலிம் பிரம்ம வித்யாரண்யம் ஆசிரமத்தில் நவீன இலக்கியச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சந்திப்புத்தான் கல்லூரிக்கு வெளியே நான் கலந்து கொண்ட முதல் இலக்கியக்கூட்டம். ஜெயமோகனின் வெண்முரசு நாவல் தொடரையும் அவருடைய எழுத்துகளையும் இடைவிடாமல் வாசித்துக் கொண்டிருந்த காலக்கட்டம். பொதுவாகவே, என்னுடைய தனிப்பட்ட கூச்ச இயல்பால் உரையாடலையோ சந்திப்புகளையோ பெரும்பாலும் தவிர்த்துவிடவே செய்வேன். ஆனால், ஜெயமோகன் நிகழ்ச்சிக்கு வருகிறார் எனும் போது நிச்சயமாகக் கலந்து கொள்ள வேண்டுமென்கிற உந்துதல் எழுந்தது. அப்போதைக்கு  வாசித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் எனக்கு தெரிந்த ஒரே இலக்கிய நண்பர் கூலிமைச் சேர்ந்த சு.தினகரன் தான். அவருக்கு நவீன கவிதைகளில் ஆர்வம் இருந்தது. நாளிதழ்களில் தொடர்ச்சியாக கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருந்தார்.  நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென தினகரனும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்...

வாசிப்பும் செயலும்

 இவ்வாண்டு வாசித்த நூல்களின் பட்டியல் 1.கூளமாதாரி 2. கழிமுகம் 3. கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை 4. சொல்லாததும் உண்மை 5. ஜுவாரா 6. ஹத்திமு ஆயிஷா 7. சலினா 8. ரஞசாவ் செபாஞ்சாங் ஜாலான் 9. மாட் லேலா கீலா 10. செம்மண்ணும் நீலமலர்களும் 11. நினைவுசின்னம் நாவல் 12. குருதிவழி 13. காச்சர் கோச்சர் 14.புத்தம் வீடு 15. கன்னி நாவல் 16. கடல்புரத்தில் 17. ஆகாயத்தாமரை 18.இன்று 19. ஒற்றன் 20. யுத்தங்களுக்கிடையில் 21அசோகமித்திரன் கட்டுரைகள் 22.இலட்சியப்பயணம் 23.`வானம் வசப்படும் 24. கர்ப்ப நிலம் 25. Harimau Jadian 26. அமுதசுரபிகள் 27. அழகான மெளனம் 28.கம்பா நதி 29. குறத்தி முடுக்கு 30. செல்சி நீலம் 31 பிரசாதம் சிறுகதைத் தொகுப்பு 32. அசோகமித்திரன் சிறுகதைகள் 33. கிளி சொன்ன கதை 34. காவியம் 35.கிராமம் நகரம் மாநகரம் 36. ஏறுவெயில்   இவ்வாண்டு தொடக்கத்தில் மாதம் ஒரு மலாய் நாவல் வாசிப்பதென முடிவெடுத்திருந்தேன். வாசிக்க வேண்டிய நாவல்கள், எழுத்தாளர்கள் என மனதுக்குள்ளே சிலவற்றைத் தெரிவு செய்திருந்தேன்.   எல்லாமே முன்னோடி மலாய் எழ...