''சீ.மு ஒரு சிங்கம் மாதிரி தனித்துத்தான் இருப்பார்'' என்றுதான் எழுத்தாளர் சீ.முத்துசாமியை இலக்கிய நண்பர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். 2017 ஆம் ஆண்டு கூலிம் பிரம்ம வித்யாரண்யம் ஆசிரமத்தில் நவீன இலக்கியச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சந்திப்புத்தான் கல்லூரிக்கு வெளியே நான் கலந்து கொண்ட முதல் இலக்கியக்கூட்டம். ஜெயமோகனின் வெண்முரசு நாவல் தொடரையும் அவருடைய எழுத்துகளையும் இடைவிடாமல் வாசித்துக் கொண்டிருந்த காலக்கட்டம். பொதுவாகவே, என்னுடைய தனிப்பட்ட கூச்ச இயல்பால் உரையாடலையோ சந்திப்புகளையோ பெரும்பாலும் தவிர்த்துவிடவே செய்வேன். ஆனால், ஜெயமோகன் நிகழ்ச்சிக்கு வருகிறார் எனும் போது நிச்சயமாகக் கலந்து கொள்ள வேண்டுமென்கிற உந்துதல் எழுந்தது. அப்போதைக்கு வாசித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் எனக்கு தெரிந்த ஒரே இலக்கிய நண்பர் கூலிமைச் சேர்ந்த சு.தினகரன் தான். அவருக்கு நவீன கவிதைகளில் ஆர்வம் இருந்தது. நாளிதழ்களில் தொடர்ச்சியாக கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருந்தார். நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென தினகரனும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்...
இவ்வாண்டு வாசித்த நூல்களின் பட்டியல் 1.கூளமாதாரி 2. கழிமுகம் 3. கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை 4. சொல்லாததும் உண்மை 5. ஜுவாரா 6. ஹத்திமு ஆயிஷா 7. சலினா 8. ரஞசாவ் செபாஞ்சாங் ஜாலான் 9. மாட் லேலா கீலா 10. செம்மண்ணும் நீலமலர்களும் 11. நினைவுசின்னம் நாவல் 12. குருதிவழி 13. காச்சர் கோச்சர் 14.புத்தம் வீடு 15. கன்னி நாவல் 16. கடல்புரத்தில் 17. ஆகாயத்தாமரை 18.இன்று 19. ஒற்றன் 20. யுத்தங்களுக்கிடையில் 21அசோகமித்திரன் கட்டுரைகள் 22.இலட்சியப்பயணம் 23.`வானம் வசப்படும் 24. கர்ப்ப நிலம் 25. Harimau Jadian 26. அமுதசுரபிகள் 27. அழகான மெளனம் 28.கம்பா நதி 29. குறத்தி முடுக்கு 30. செல்சி நீலம் 31 பிரசாதம் சிறுகதைத் தொகுப்பு 32. அசோகமித்திரன் சிறுகதைகள் 33. கிளி சொன்ன கதை 34. காவியம் 35.கிராமம் நகரம் மாநகரம் 36. ஏறுவெயில் இவ்வாண்டு தொடக்கத்தில் மாதம் ஒரு மலாய் நாவல் வாசிப்பதென முடிவெடுத்திருந்தேன். வாசிக்க வேண்டிய நாவல்கள், எழுத்தாளர்கள் என மனதுக்குள்ளே சிலவற்றைத் தெரிவு செய்திருந்தேன். எல்லாமே முன்னோடி மலாய் எழ...