அமெரிக்காவில் ஏப்ரல் 1 மற்றும் 2, 2026 நடந்த வாழும் தமிழ் விழா பற்றிய என் மனப்பதிவை எழுத வேண்டுமென எண்ணியிருந்தேன். அது மனப்பதிவு மட்டுமில்லாமல் குறிப்பாக, பயண அனுபவமாக விரிந்திருக்கிறது. அதனை ஒவ்வொரு பதிவாக இடலாம் என்றிருக்கிறேன். கனவு 1 2022 ஆம் ஆண்டு ஜெயமோகன் மலேசியாவுக்கு வந்திருந்தார். ஜார்ஜ் டவுன் இலக்கியத் திருவிழாவின் சிறப்பு` விருந்தினர்களில் ஒருவராக வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியை ஒட்டி கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் நூல்களின் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போதுதான், ஜெயமோகனிடம் எழுத்தாளர் ம.நவீன் தமிழினி 2000 போன்ற மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற யோசனையைச் சொன்னார். அவர் சொன்னப்போது நானும் உடனிருந்தேன். 2000 ஆம் ஆண்டு காலச்சுவடு இதழ் புத்தாயிரத்தில் தமிழிலக்கியத்தில் செல்திசையை ஒட்டி தமிழினி 2000 எனும் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. அதில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கல்வியாளர்களே கலந்து கொண்டனர். அவர்களின் கட்டுரைகளை மாநாட்டு மலரில் கண்ட போது அதன் ‘’கல்வியியல் ஆய்வுக்கட்டுரைத் ...
''சீ.மு ஒரு சிங்கம் மாதிரி தனித்துத்தான் இருப்பார்'' என்றுதான் எழுத்தாளர் சீ.முத்துசாமியை இலக்கிய நண்பர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். 2017 ஆம் ஆண்டு கூலிம் பிரம்ம வித்யாரண்யம் ஆசிரமத்தில் நவீன இலக்கியச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சந்திப்புத்தான் கல்லூரிக்கு வெளியே நான் கலந்து கொண்ட முதல் இலக்கியக்கூட்டம். ஜெயமோகனின் வெண்முரசு நாவல் தொடரையும் அவருடைய எழுத்துகளையும் இடைவிடாமல் வாசித்துக் கொண்டிருந்த காலக்கட்டம். பொதுவாகவே, என்னுடைய தனிப்பட்ட கூச்ச இயல்பால் உரையாடலையோ சந்திப்புகளையோ பெரும்பாலும் தவிர்த்துவிடவே செய்வேன். ஆனால், ஜெயமோகன் நிகழ்ச்சிக்கு வருகிறார் எனும் போது நிச்சயமாகக் கலந்து கொள்ள வேண்டுமென்கிற உந்துதல் எழுந்தது. அப்போதைக்கு வாசித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் எனக்கு தெரிந்த ஒரே இலக்கிய நண்பர் கூலிமைச் சேர்ந்த சு.தினகரன் தான். அவருக்கு நவீன கவிதைகளில் ஆர்வம் இருந்தது. நாளிதழ்களில் தொடர்ச்சியாக கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருந்தார். நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென தினகரனும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்...