முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வன்முறையின் புதிர்பாதை

எழுத்தாளர் ஹம்சா உசேனை எனக்கு அறிமுகம் செய்தது மலாய் எழுத்தாளரும் செம்மையாக்குநருமான அஸ்ரின் பவ்ஸிதான். மலாய் நாவல் உலகில் ஹம்சா தனித்துவமானவர் எனக் குறிப்பிட்டு அவரின் நாவல்களை வாசிக்க அஸிரின் தான் பரிந்துரை செய்தார். எழுத்தாளர் ஹம்சா அப்துல் மஜிட் பின் ஹுசேன் சிங்கப்பூரைச் சேர்ந்த மலாய் எழுத்தாளர்.     இலக்கிய உலகில் ஹம்சா ஹுசேன் அல்லது பாக் எனும் பெயரிலே அறியப்படுகிறார்.    https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=11b77927-df80-4e6b-b953-d2240292abd8 ஹம்சா ஹுசேனின் வாழ்க்கைக் குறிப்பு Hamzah Hussein மலாய் இலக்கிய உலகில் மிகப் புகழ்பெற்ற முன்னோடி இலக்கிய இயக்கமான அஸாஸ் 50 (Asas 50) இல் ஹம்சா மிகத் தீவிரமாக இயங்கியிருக்கிறார். அந்த அமைப்பில் கலை கலைக்காகவா அல்லது மக்களுக்ககாவா எனும் விவாதம் எழுந்திருக்கிறது.  ஹம்சா கலை கலைக்காகத்தான் எனும் தரப்பை ஆதரித்து  அந்த அமைப்பிலிருந்தே வெளியேறியிருக்கிறார். சிங்கப்பூரில் பிரபலமாக இயங்கிய ஷா பிரதர்ஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பின்னாளில், ...
சமீபத்திய இடுகைகள்

உலகக் கனவு 2

  முதல் விசா தோல்வியடைந்ததுமே பயணத்தில் இணையலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு அரை நாள் அந்தச் சிந்தனையிலே மூழ்கியிருந்தேன். மறுவிண்ணப்பம் செய்திருந்த போதும் சந்தேகம் மட்டும் தீரவில்லை. ம.நவீனிடமே ஏன் அமெரிக்கப் பயணம் முக்கியமானது எனக் கேட்டேன். அவரும் உலக அரங்கின் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் நிகழ்ச்சி ஏன் முக்கியமானது என்பதை விளக்கினார். எல்லா முயற்சிகளுக்கும் பின்னரும் அறியப்படாத ஒரு சரடு பின் தொடரச் செய்கிறது. உலக அரங்கின் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் திட்டம் உருவாகிக் கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் மற்ற இன எழுத்தாளர்கள் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் முயற்சிகளும் தீவிரமாக நடந்தன. 2025 ஆம் ஆண்டு மலாய்- சீன- தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடி உரையாடும் களமான முக்கோணக்கதைகள் நிகழ்ச்சியை வல்லினம் ஒருங்கிணைத்தது. மலேசியா சுதந்திரமடைந்து 60க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகியும் இம்மாதிரியான முயற்சிகள் பெரும்பாலும் நடந்ததில்லை. அதனை வல்லினம் உண்மையான தீவிரத்துடன் ஏற்பாடு செய்திருந்தது. தமிழிலிருந்து மலாய்க்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சிறுகதை தொக...

உலகக் கனவு

 அமெரிக்காவில் ஏப்ரல் 1 மற்றும் 2, 2026 நடந்த வாழும் தமிழ் விழா பற்றிய என் மனப்பதிவை எழுத வேண்டுமென எண்ணியிருந்தேன். அது மனப்பதிவு மட்டுமில்லாமல் குறிப்பாக, பயண அனுபவமாக விரிந்திருக்கிறது. அதனை ஒவ்வொரு பதிவாக இடலாம் என்றிருக்கிறேன். கனவு 1 2022 ஆம் ஆண்டு ஜெயமோகன் மலேசியாவுக்கு வந்திருந்தார். ஜார்ஜ் டவுன் இலக்கியத் திருவிழாவின் சிறப்பு` விருந்தினர்களில் ஒருவராக வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியை ஒட்டி கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் நூல்களின் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போதுதான், ஜெயமோகனிடம் எழுத்தாளர் ம.நவீன் தமிழினி 2000 போன்ற மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற யோசனையைச் சொன்னார். அவர் சொன்னப்போது நானும் உடனிருந்தேன். 2000 ஆம் ஆண்டு காலச்சுவடு இதழ் புத்தாயிரத்தில் தமிழிலக்கியத்தில் செல்திசையை ஒட்டி தமிழினி 2000 எனும் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. அதில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கல்வியாளர்களே கலந்து கொண்டனர். அவர்களின் கட்டுரைகளை மாநாட்டு மலரில் கண்ட போது அதன் ‘’கல்வியியல் ஆய்வுக்கட்டுரைத் ...

சீ.முவுக்கு அஞ்சலி

 ''சீ.மு ஒரு சிங்கம் மாதிரி தனித்துத்தான் இருப்பார்'' என்றுதான் எழுத்தாளர் சீ.முத்துசாமியை இலக்கிய நண்பர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். 2017 ஆம் ஆண்டு கூலிம் பிரம்ம வித்யாரண்யம் ஆசிரமத்தில் நவீன இலக்கியச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சந்திப்புத்தான் கல்லூரிக்கு வெளியே நான் கலந்து கொண்ட முதல் இலக்கியக்கூட்டம். ஜெயமோகனின் வெண்முரசு நாவல் தொடரையும் அவருடைய எழுத்துகளையும் இடைவிடாமல் வாசித்துக் கொண்டிருந்த காலக்கட்டம். பொதுவாகவே, என்னுடைய தனிப்பட்ட கூச்ச இயல்பால் உரையாடலையோ சந்திப்புகளையோ பெரும்பாலும் தவிர்த்துவிடவே செய்வேன். ஆனால், ஜெயமோகன் நிகழ்ச்சிக்கு வருகிறார் எனும் போது நிச்சயமாகக் கலந்து கொள்ள வேண்டுமென்கிற உந்துதல் எழுந்தது. அப்போதைக்கு  வாசித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் எனக்கு தெரிந்த ஒரே இலக்கிய நண்பர் கூலிமைச் சேர்ந்த சு.தினகரன் தான். அவருக்கு நவீன கவிதைகளில் ஆர்வம் இருந்தது. நாளிதழ்களில் தொடர்ச்சியாக கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருந்தார்.  நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென தினகரனும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்...

வாசிப்பும் செயலும்

 இவ்வாண்டு வாசித்த நூல்களின் பட்டியல் 1.கூளமாதாரி 2. கழிமுகம் 3. கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை 4. சொல்லாததும் உண்மை 5. ஜுவாரா 6. ஹத்திமு ஆயிஷா 7. சலினா 8. ரஞசாவ் செபாஞ்சாங் ஜாலான் 9. மாட் லேலா கீலா 10. செம்மண்ணும் நீலமலர்களும் 11. நினைவுசின்னம் நாவல் 12. குருதிவழி 13. காச்சர் கோச்சர் 14.புத்தம் வீடு 15. கன்னி நாவல் 16. கடல்புரத்தில் 17. ஆகாயத்தாமரை 18.இன்று 19. ஒற்றன் 20. யுத்தங்களுக்கிடையில் 21அசோகமித்திரன் கட்டுரைகள் 22.இலட்சியப்பயணம் 23.`வானம் வசப்படும் 24. கர்ப்ப நிலம் 25. Harimau Jadian 26. அமுதசுரபிகள் 27. அழகான மெளனம் 28.கம்பா நதி 29. குறத்தி முடுக்கு 30. செல்சி நீலம் 31 பிரசாதம் சிறுகதைத் தொகுப்பு 32. அசோகமித்திரன் சிறுகதைகள் 33. கிளி சொன்ன கதை 34. காவியம் 35.கிராமம் நகரம் மாநகரம் 36. ஏறுவெயில்   இவ்வாண்டு தொடக்கத்தில் மாதம் ஒரு மலாய் நாவல் வாசிப்பதென முடிவெடுத்திருந்தேன். வாசிக்க வேண்டிய நாவல்கள், எழுத்தாளர்கள் என மனதுக்குள்ளே சிலவற்றைத் தெரிவு செய்திருந்தேன்.   எல்லாமே முன்னோடி மலாய் எழ...

வல்லினம் விருது விழா 2025 அனுபவம்

  இவ்வாண்டுக்கான வல்லினம் விருதுக்கு மேனாள் தேர்வு வாரிய அதிகாரி பி.எம்.மூர்த்தி தேர்வு செய்யப்படுவது குறித்து எழுத்தாளர் ம.நவீன் என்னிடம் குறிப்பிட்டதும், ஒரு கேள்வி எனக்குள் எழுந்தது. அவர் வகித்த பணியைக் கொண்டுதானே அவர் பல பங்களிப்புகளைச் செய்தார் என்பதைப் போல. விருதுக்கு அவர் தேர்வு பெற்றிருக்கும் செய்தியை அவரிடம் சொல்வதற்கு நவீன் என்னையும் அழைத்திருந்தார். அதுவரையில் வல்லினம் நிகழ்ச்சியில் இரண்டொரு முறை சந்திருந்ததும் நான் அறிந்து வைத்திருந்த செய்திகளைக் கொண்டும் மூர்த்தியை மனதுக்குள்ளாக வரையறை செய்து கொண்டேன். அவர் அறிமுகப்படுத்திய படைப்பிலக்கியப் பிரிவு குறிப்பாக சிறுகதைப் பகுதி வழி ஊக்கம் பெற்ற தலைமுறையைச் சேர்ந்தவன் நான். அவரால் உரமூட்டப்பட்டு மலேசியா முழுவதும் இலக்கியப் பாடத்தை மாணவர்கள் தேர்வு பாடமாக எடுக்க துணை நின்ற ஆசிரியர் படையில் ஒருவரான குமாரி ராதாவின் தூண்டுதலாலே நானும் இலக்கியம் பாடத்தைத் தேர்வு செய்திருந்தேன். நான் எஸ்.பி.எம் தேர்வில் அமரும் ஆண்டுக்கு முன்னர்தான் கல்வி அமைச்சின் பாட வரம்பு நிர்ணயத்தால் அறிவியல் பிரிவு மாணவர்கள் தமிழ் இலக்கியம் பாடம் எடுக்க முடியா...

வறண்ட வாழ்வின் சித்திரங்கள்

  பெருமாள் முருகனின் கூளமாதாரி நாவலை வாசித்தேன். மோட்டாங்காடு எனப்படும் வறண்ட காட்டில் பண்ணைக்காரர்களின் ஆடுகளை மேய்க்கும் (ஆளுக்கார பசங்க) பதின் பருவத்துச் சிறுவர்களின் உலகை நாவல் பேசுகிறது. பண்ணைக்காரர்களின் ஆடுகளை மேய்க்கும் கூளையன், நெடும்பன், வவுறி, செவிடி, மொண்டி ஆகிய ஐந்து சிறுவர்களின் உலகையே நாவல் சித்திரிக்கிறது. ஆண்டுக்கு இவ்வளவு என கூலி பேசப்பட்டுக் கொத்தடிமைகளைப் போலவே சிறுவர்கள் ஆடுகளை மேய்க்கவும் பட்டியைத் தூய்மைப்படுத்தும் வேலையைச் செய்கின்றனர். சாதியால் தாழ்த்தப்பட்ட தெலுங்கு பேசும் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த சிறுவர்களை நிலவுடைமைச் சாதியினரான கவுண்டர்களின் பட்டிகளில் வேலை செய்கின்றனர். ஆடுகளை மேய்க்கக் கிளம்பும் காலையில் குச்சியால் தூக்குப் போசியைத் தூக்கிக் கைபடாமல் முன்னிரவு மீந்து போன கம்மஞ்சோற்றை வைத்து மீண்டும் குச்சியாலே இடையச் சிறுவர்களுக்குத் தருகின்ற அளவு சாதித் தீண்டாமை இருக்கிறது. சிறுவயதிலே குடும்பத்தை விட்டுப் பிரிந்து பண்ணைக்காரர்களின் கொடும் வசவுகளைத் தாங்கி கொண்டு கொடுமையான வேலையையும் செய்யும் சிறுவர்கள் தங்களுக்கான மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்...