முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜுவாரா - குரூரத்தின் காலடித்தடம்

  2023 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு விருந்தினராகச் சென்றிருந்தேன். அந்தச் சந்திப்பின் ஊடே இன்னொரு முக்கியமான பொறுப்பும் எனக்குத் தரப்பட்டிருந்தது. அவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த மலாய் மொழி எழுத்தாளர் எஸ்.எம்ஷாக்கிரின் அவைக்கு மட்டுறுத்துணராகப் பொறுப்பேற்று நடத்துவது. முன்னரே ஷாக்கிரை ஒரு முறை சந்தித்து அவருடைய படைப்புலக அறிமுகத்தைக் குறித்து உரையாடியதைத் தவிர பெரிய முன் தயாரிப்புகள் இல்லாமல்தான் அந்த அவையை வழிநடத்தினேன். அந்த அவையில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் வழியேதான் மலேசியாவில் இருக்கும் பன்மொழி இலக்கியச் சூழல் எவ்வித உரையாடல்களும் இன்றி தத்தம் தனித்தனித் தீவாந்திரங்களாகச் செயற்படுகிறதென்ற உணர்வு உறுதிபட்டுக் கொண்டே வந்தது. அதற்கடுத்த என்னுடைய அவையிலும் கூட மலாய் மொழி இலக்கியத்தை வாசிக்கிறீர்களா… அதன் செல்திசை குறித்துச் சொல்லுங்கள் போன்ற கேள்விகளுக்குத் தெரியாதென்ற பதிலை அளிக்க மிகுந்த குற்றவுணர்வாக இருந்தது. நேரடி அனுபவங்களிலிருந்தும் செய்திகளிலிருந்தும் பெறும் தகவல்களைக் கொண்டு மற்ற மொழி இலக்கியங்களை அணுகுவதும் அபத்தமாக இருந...
 சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி பிறந்தநாள் விழா - 25 ஜனவரி 2025 சுவாமிபிரம்மானந்த சரஸ்வதிக்கு 70 வயது பிறந்தநாள் விழா அவரின் நண்பர்களாலும் மாணவர்களாலும் ஒருங்கிணைக்கப்படுகிறதென்று தெரிந்ததுமே அதில் கலந்து கொள்ளலாமென முடிவெடுத்தேன். எழுத்தாளர் ம.நவீனும் அழைத்துக் கேட்க உடனே வருகிறேன் எனச் சொல்லி விட்டேன்.   சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அவர்களின் தனிப்பட்ட ஆளுமையை நான் அறிந்திருக்கவில்லை. ஆசிரியர்க் கல்விக் கழகத்தில் பயிலும் போது விரிவுரைஞர் தமிழ்மாறன் ஆசிரமத்தில் ஏற்பாடு செய்யும் பாரதி விழாக்களின் போது சுவாமியைச் சந்திப்பேன். அதைச் சந்திப்பு எனச் சொல்வதை விட அணுக்கத்திலிருந்து எந்த அறிமுகமும் இல்லாமல் கொஞ்சம் அகல நின்று பார்ப்பதாகத்தான் சொல்ல வேண்டும். நானும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவில் இருந்ததால், தொடக்கம் முதல் முடிவு வரை நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பணிகளில் சுவாமியும் இணைந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆசிரமத்தில் தங்கியிருந்த மாணவர்களிடம் மண்டபத்தில் நாற்காலிகளை அடுக்கச் சொல்வது தொடங்கி அன்னதான மண்டபத்தில் உணவுத் தயாராவது, பரிமாறுவது என எல்லா வேலைகளையும் சுவாமி உடனிருந்து கவனித்துக...