முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரபும் நவீனமும்

  இவ்வாண்டு தொடக்கத்தில் மாதம் ஒரு மலாய் நாவலை வாசிக்க வேண்டுமென முடிவெடுத்திருந்தேன். அதன்படி மூன்று மாதங்களாக மூன்று நாவல்களை வாசித்திருந்தேன்.   மலேசியாவில் வழங்கப்படும் தேசிய இலக்கியவாதி விருது பெற்றவர்களின் நாவல்கள், முன்னோடிகளின் நாவல்கள் இப்படியாகத்தான் தெரிவு செய்து வாசித்திருந்தேன். ஆனால், அந்தத் தெரிவு சரியானது தானா என்ற குழப்பம் இடையில் எழுந்தது. மலாய் எழுத்தாளர் நண்பர் அஸ்ரினிடம் சில நாவல் பரிந்துரைகளைக் கேட்டேன். அவர் சில நாவல்களைப் பரிந்துரை செய்தார். நான் அதுவரை வாசித்திருந்த நாவல்களின் களம், அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக சில நாவல்களைப் பரிந்துரை செய்தார். அவர் குறிப்பிட்ட எல்லா நாவல்களுமே மறுபதிப்பு காணாத நாவல்கள். அந்த நாவல்களைத் தேடிக் கண்டையும் முயற்சியில் ஒவ்வொரு மாதமாக வாசிப்பு தடைபட்டுக் கொண்டே வந்தது. உடனே வாசிப்பும் தடைபட்டு விட்டது. அதுவரையில் வாசித்திருந்த மூன்று நாவல்களும் இலக்கிய அடிப்படையில் கலவையானதாக இருந்தது. எதற்காக மலாய் நாவலை வாசிக்கின்றோம் என்ற கேள்வியெழுந்தது. அறியப்படாத மலாய் சமூகத்தின் வாழ்வை அல்லது அவற்றின் இலக்கியத்தன்மைய...
  அசோகமித்திரனின் இரண்டு கதைகள் அசோகமித்திரனின் இந்திராவுக்கு வீணை கற்று கொள்ள வேண்டும், இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை ஆகிய இரண்டு சிறுகதைகளுக்குமான கால இடைவெளி 21 ஆண்டுகள். முதல் கதை 1959 இல் வெளிவந்திருக்கிறது.   ஒரு இளம்பெண்ணுக்கு உருவாகின்ற வீணை கற்கும் ஆசையின் வழியே நடுத்தரக் குடும்பத்தில் பெண்களின் நிலை தெரிய வருகிறது. இரண்டாம் கதை, அந்த ஆசை ஈடேறாமல் மனதுக்குள் ஏற்படுத்தி விடும் அந்தரங்கமான வடுவொன்றைப் பேசுகிறது. இரு கதைகளுமே குடும்பச் சூழல், நெருக்கடிக்களுக்குள் புதைந்து போயிருக்கின்ற ஒரு பெண்ணின் அந்தரங்கமான உணர்வுகளைச் சொல்லுகின்ற முக்கியமான கதைகள். முதல் கதையில் குடும்பச்சூழலை நேர்த்தியான சித்திரிப்புகளால் அசோகமித்திரன் காட்டுகிறார். விற்பனைப் பிரதிநிதியான அப்பா தேர்வைக் காரணம் காட்டி மகளின் இசை வகுப்புக்குச் செல்லும் ஆர்வத்தைக் கலைக்கிறார். இசை ரசனை இல்லாத அம்மா, கோவில் கச்சேரியில் பாடவிருக்கும் கலைஞரைப் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்ள கேள்விகளால் இந்திராவைத் துளைத்தெடுத்து கச்சேரியின் போது வாய் பிளந்து தூங்குகிறார். அண்ணனோ, சீட்டு விளையாடும் ஆர்வத...