முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 மணற்கடிகை நாவல் வாசிப்பனுபவம்

ஏதேனும் இரைச்சல் அல்லது தொடர் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தால் எனக்குத் தூக்கம் நன்கு வரும். உறக்கமற்ற இரவுகளில் நிசப்தபே பெரும் அச்சமாகச் சூழ்ந்து கொள்ளும். சூழ இருக்கும் நிசபத்தின் பேரிரைச்சலைக் களைய ஏதேனும் ஒலியைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். மணற்கடிகை நாவலை வாசித்து முடிக்கும் வரை ஓயாத சிறு இரைச்சலொன்று ஒலித்துக் கொண்டிருந்ததாகவே இருந்தது. குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிச் செல்கிற தறிச்சத்தமாகவும் இயந்திரங்களின் கலவையொலிகளாகவும் இருந்தன. திருப்பூர் எனும் இந்தியாவின் மாபெரும் தொழிற்நகரொன்றின் பாரம்பரியத் தொழிற்முறையிலிருந்து நவீனத் தொழில் உலகுக்குள் செல்லும் காலக்கட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு நாவல் எழுந்திருக்கிறது. சிறு வயதில் நகரங்களைப் பார்க்கும் போது வியப்பில் ஆழ்த்துவது அதன் ஒழுங்கும் பிரம்மாண்டமும்தான். கார்கள் ஓயாமல் எதையோ நோக்கி விரைவதும், கட்டிடங்கள் உயர்ந்து செறிவாக, சாலைகள் மேல் கீழாக இருப்பது பயத்தையும் வியப்பையும் ஆழ்த்தும். அதே நகரில் வந்து இருக்கும் போது அதன் பிரம்மாண்டங்கள், ஒழுங்குக்குள் அமைகிற வாழ்வு குறித்த விசாரமே இந்நாவலை எல்லா நகருக்குமானதாக எல்லா மனிதர்களுக்குமானதாக ஆக்குகிறது.



நாவலின் முதன்மைப் பாத்திரங்களாக வளரிளம் பருவத்தில் சிவா, சண்முகம், பரந்தாமன், அன்பழகன், திரு ஆகியோர் வருகின்றனர். பள்ளிப் படிப்பு முடிந்த பின்னதாக நீளும் அலைவுகளும் தடுமாற்றங்களும் நடுத்தர வயது வரையில் சொல்லப்படுகிறது. என்னுடைய வயதையும் கடந்து செல்கின்ற வாழ்வு என்பதால் பலமுறை என்னையும் நாவலில் பார்வையாளனாக இருத்திக் கொள்ள முடிந்தது. தமிழ் சமூகக் கட்டுமானம் என்பது பெரும்பாலும் இயங்கும் தொழிற்முறையிலிருந்து உருவாவதே. அந்த இறுக்கமான கட்டுமானமே சமூக நிலை, பொருளியல் நிலை ஆகியவற்றை உறுதி செய்கிறது. நிலப்பிரப்புதவக் காலத்துக்குப் பிந்தைய முதலாளித்துவக் காலக்கட்டத்தில் நிகழும் மாற்றங்களான கல்வி வாய்ப்பு, தொழிற் புரட்சி போன்றவற்றால் மரபாக வரும் சமூகக்கட்டுமானம் தலைக்கீழாக்கம் அடைகின்றன. இறுக்கமான வருக்கப்படிநிலையிலிருந்து கல்வி பெற்று வரக்கூடியவர்கள் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்தப் பாய்ச்சல் நிகழும் போது சமூகக்கட்டுமானம் நிச்சயமாக உடைந்து போகிறது. ஆனால், வழிவழியாகத் தொடர்ந்து வரும் சமூக, ஒழுக்கவியல் மதிப்பீடுகள் ஆழ்மனத்தில் அப்படியே தங்கி போகின்றன. இந்தச் சித்திரத்தை ஏற்படுத்திக் கொள்வதன் வாயிலாகவே, மணற்கடிகை நாவலை அணுக இயலும்.

மனித மனத்தில் இருக்கும் ஆழ்மன உணர்வுகள் நவீன சமூக உருவாக்கத்தின் போது எதிர்கொள்கிற முரண்களையும் திரிபுகளையுமே இந்நாவலின் முதன்மை தரிசனமாகத் திரட்டிக் கொள்ள முடிகிறது. இந்தத் தொழிற் வளர்ச்சியில் நில்லாமல் ஒடிக்கொண்டிருக்கிற சிவராஜ் தன்னுடைய காமத்தையும் ஓயா அலைகழிதலாகவே காண்கிறான். எதுவுமே நிறைவு செய்ய முடியாத வெறுமையை அடைகிறான். அந்த வெறுமையின் ஆழத்தில் இளமையில் எழுந்த உமாவின் மீதான காதலே உறைந்திருக்கிறது. அதைப் போலவே, சண்முகமும் காமத்தைக் கொண்டாட்டமாகக் கருதுகிறான். அந்தக் காமம் பெண் குழந்தை பிறந்தவுடன் முழுவதுமாய் மாறுவதென்பது நாடகீயத்தருணமாக அமைந்திருந்தது. வாழ்வின் தொடரோட்டத்தில் காமத்திலிருந்து விலகி செல்கிறான் அன்பழகன். தன்னுடைய ஆணவம் தோற்றுப் போகுந்தருணத்தில் காமத்திலிருந்து ஓட முயல்கிறான் பரந்தாமன். காமம் என்பதை வெறும் இச்சையாக, இயந்திரம் ஓடுவதற்கான மசகு எண்ணெயாக மாறி போகும் தருணத்தையும் இந்நாவல் அளிக்கிறது.உடல் வெறும் பொருளாக மாறுகிறது. அதன் மூலமாகப் பெறும் பணத்தில் தனக்கான சமூகப்பொருளியல் நிலையை அடைகிறாள்………………


இந்த நாவலில் இளமைக்கே உரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் தேடலையும் சொல்கிறது. காத்திரமான இலக்கியப்படைப்புகள் இவ்வாறுதான் அமைய வேண்டும் எனச் சண்முகம் சில முன்முடிவுகளுடன் இருக்கிறான். கம்யூனிச இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு அரசியல் முடிவுகளால் வெளியேறுகிறான் பரந்தாமன். இந்த அடையாளங்களை விரும்பி அணிந்து பின்னர் மனம் கொள்கிற வெறுமையை இந்நாவலில் காண முடிகிறது. இளமையில் சாகசமும் அருஞ்செயலாகத் தோன்றுபவை மெல்ல திரிபடைந்து பொருள்ளில்லாத வெறும் செயலாக மாறுகிறது.

 

எழுந்துவரும் தொழிற்புரட்சி காலத்தில் கூடவே கம்யூனிசமும் தேவையென உணரப்படுகிறது. தொழிலாளிகளின் மீதான முதலாளித்துவத்தின் சுரண்டலைப் பற்றிய தேவையினால் அவ்வியக்கம் திருப்பூரில் அல்லது அதைச் சமானமான வேறு நகரங்களிலும் வேறு பெயர்களில் தேவைபடுகிறது. ஆனால், மக்கள் உள்ளுக்குள் கனவுகாண்பது சமநிலையை அன்று…எதிரில் இருப்பவனை முன்னேறிச் செல்லும் கனவுகளையே. அந்தக் கனவுகளைச் சுமந்து கொண்டு கம்யூனிசத்தைப் பேசுவது முரணாக அமைகிறது. அந்த முரனில் கம்யூனிசமும் முதலாளித்துவத்துடன் சற்றே கடுமையான சமரசத்தைச் செய்து கொள்ளும் அடையாள அரசியலாக மாறுகிறது. கம்யூனிசம் போன்ற இயக்கங்களின் பங்களிப்பு என்பது தேவையானதாகவே இருந்தாலும் இதுமாதிரியான சமரங்களின் வாயிலாகவே நீடித்திருக்க இயலுகின்றன எனும் சமூக யதார்த்ததை முன்வைக்கிறது.

 அதற்கு நேர் எதிராகச் சமயம் இருக்கிறது. வாழ்வு மீதான மேலான பொருளை அல்லது தொடர்ந்து நிகழும் நிறைவில்லா கேள்விகளை அடைய சமயத்தை நாடுகிறார் சித்தர் சாமி சுப்ரமணியம். பெரும்பான்மையான பொழுதுகளில் சமயம் என்பது சிறு இடைத்தாங்கலாக ஆசுவாசப்படுத்தச் செய்யும் எளிய பயணமாக இருக்கிறது.இந்த நாவலில் ஒருவிதமான சுமூகத்தன்மையை எல்லா இடங்களிலும் காண முடிகிறது. நண்பர்கள் தங்கள் மனத்தில் இருக்கும் காழ்ப்புகளை நெஞ்சோடு வைத்துக் கொள்வதும் மீறி பீறிட்டு வரும் தருணத்தில் புரிந்து கொள்கின்ற நண்பர்களும் சேர்ந்து சுமூகமானதாகவே சூழல் அமைகின்றன. மேலும், வருக்க வேறுபாடு ஏற்படுத்தும் ஒருவிதமான வன்மம், சிக்கல் ஆகியவை முழுமையாக வெளிப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

 இந்த நாவலில் இருக்கின்ற படிமங்கள் கற்பனையால் சென்றடையக்கூடிய உச்சப்பட்ச சாத்தியத்தை அளிக்கின்றன. மலையில் அமர்ந்திருக்கும் நண்பர்கள் பின்னே இருக்கும் மயிலின் துயரார்ந்த அகவலாகட்டும், சட்டென்று ஹைட்ராலிக் தேராக மாறி விரைவாக வீதிவலம் வருகின்ற தேராகட்டும், வயதேற வயதேற துலக்கம் காணும் சுற்றுப்புறக் காட்சிகளாகட்டும் நாவலின் அப்போதையத் தன்மையைப் பிரதிபலிக்கின்றன. சூத்ரதாரியான கோபாலகிருஷ்ணனின் பாவைகளாகவே நாமும் மாறி போகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற