முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 மருத்துவர் சண்முகசிவாவின் எட்டுச் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியை வாசித்தேன், 2018 ஆம் ஆண்டு வல்லினம் மற்றும் யாவரும் பதிப்பகமும் இணைந்து பதிப்பித்திருக்கும் இந்நூலில் முந்தையத் தொகுப்பிலிருந்து இரண்டு கதைகளும் புதிய கதைகளாக ஆறு கதைகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவர் சண்முகசிவா ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் நலமுடன் வாழ்வோமங்கத்தின் வாயிலாகத்தான் அறிவேன். அதன் பின்னர், மயில் மாத இதழில் ஒவ்வொரு மாதமும் விழி வாசல் வழியே என்ற தொடரில் கட்டுரைகள் எழுதி வந்ததை வாசித்திருக்கிறேன். பல கவிதை மேற்கோள்களும், புதிய திறப்புகளை அளிக்கும் கட்டுரைத்தொடருக்காகவே மயில் இதழை வாங்கி வாசித்திருக்கிறேன். அதன் பின்னால் மைஸ்கில் அறவாரியம் நடத்திய இதழிலும் அவரின் மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்கிற மருத்துவக் கேள்விப்பதில் நூலிலிருந்து சில கேள்விப்பதில்களை வாசித்திருக்கிறேன். அதிலும் பல நவீன கவிதை வரிகளை மேற்கோள்காட்டி பதில்களை எழுதியிருப்பார். எந்தக் கேள்விக்கும் இந்த நோய் என்றோ இதுதான் தீர்வு என்றோ நேரடியான பதில் அளிக்காமல் உளவியல், இலக்கியம், நகைச்சுவை எனத் தொட்டு விரியும் பதில்கள் வாசிக்க சுவாரசியமானவை. அந்தப் பதில்களின் வாயிலாக பல படைப்பாளிகள், படைப்புகளின் பெயர்கள் அறிமுகமாகியிருக்கிறது.



ஆனால், இந்த நோய்க்கு இந்தத் தீர்வு என்றோ, இதுதான் சிகிச்சை முறை என்றோ திட்டவட்டமான பதில்களை எதிர்பார்க்கும் ஒருவருக்கு சண்முகசிவாவின் பதில்களில் சற்றே விலக்கம் இருக்கக்கூடும். அவரின் கதைகளிலும் இந்த அணுகுமுறையையே காணமுடிகிறது. அவை நேரடியான சித்திரமொன்றை எழுப்பி அதன் பின்னால் வேறொன்றை முன்வைக்கக்கூடியவையாக இருக்கின்றன. மெர்ஸ்டிசும் முண்டக்ககண்ணியம்மன்னும் கதையில் ஜப்பானிய பன்னாட்டுத் தொழிற்சாலையில் இயக்குநராகப் பணியாற்றும் ரட்னராஜாவுக்குக் கார் ஒட்டுநராக முனியாண்டி பணிபுரிகிறான். முனியாண்டி காரைத் தன் சொந்த தேவைக்குப் பயன்படுத்திய குற்றத்துக்காக வேலை நீக்க அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறான். அவனுடன் பணியாற்றும் பாலாத்தான் முனியாண்டியின் தவற்றை ராஜாவிடம் கூறுகிறான். அந்தக் குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டால் வேலை பறிபோகாது என்ற அறிவுரையையும் கூறுகிறான். உயரதிகாரியின் நன்மதிப்பைப் பெறுவதும் அதைத் தக்கவைக்க முயற்சிகள் எடுப்பதாக அடிமட்டத்தில் சிறு அதிகாரத்துக்கான பூசல் இருக்கும் சூழலில் ரட்னராஜாவும் இன்னொரு அதிகாரப் பூசலில் இருக்கிறார். நிறுவனத்தின் மற்றொரு உயரதிகாரியான கமாருடின் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களும் மாந்திரீகர்களின் சந்திப்பும் அவரை அச்சப்படுத்துகின்றன. இந்தச் சூழலில் அலுவலகத்தில் கண்டெடுக்கப்படும் ஊசிகள் குத்தப்பட்ட எலுமிச்சைப்பழம் கூடுதலாக அச்சுறுத்துகிறது. இந்தச் சூழலில்தான், குங்குமத் திலகமிட்ட நெற்றியுடன் பக்திமானாக ராஜாவின் முன்னின்று மன்னிப்பு கோரச் செல்கிறான் முனியாண்டி. அவனுடைய குங்குமம் தன்னுடைய சிக்கலுக்கான உபாயமாக எண்ணி அவன் சொல்லுகின்ற கோவிலுக்கு ராஜா செல்கிறார். அந்தக் கோவிலில் நிகழும் மருளாடலில் முனியாண்டியே அம்மனாக மாறி ராஜாவுக்கு வாக்கு அளிக்கிறார். முனியாண்டியை மெர்சிடிஸ் காரில் படுக்கவைத்து ராஜா ஒட்டுநராக மாறி காரை ஒட்டுவதாகக் கதை முடிகிறது.கதையின் இறுதியில் நிகழும் சிறு பிசகல் அளிக்கும் பகடியென்பது, அதிகாரத்தைத் தலைகீழாக மாற்றிப் பார்க்கும் சிறு விளையாடலாக இந்தக் கதையில் திரண்டு வந்திருக்கிறது. இந்தக் கதையை அரசியல் கதையாகவும் மாற்றுகிறது.

சாமிக்குத்தம் என்கிற கதை, தோட்டத்தில் சிதைந்துபோய் கவனிப்பாரற்ற கோவில் எவ்வாறு தவறுதலாக இடிக்கப்பட்டதும் அரசியல் காரணங்களால் அதிகார மையமாகத் திரண்டு வருகிறதென்பதை வேடிக்கையாகச் சொல்லுகிறது. இந்தக் கதையில் இருக்கும் சம்பவ அடுக்குகளின் விரைவுத்தன்மை சமூகத்தின் அவலச் சூழலைக் காட்டுகிறது. தமிழ் சமூகத்தில் இருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பு, கண்மூடித்தனம் எவ்வாறு அரசியல் லாபத்துக்கு அதிகாரத்துக்கும் மூலதனமாகிறது என்பதைக் கதை பேசுகிறது. இடிக்கப்பட்ட கோவிலில் பூசாரியாக வேலை செய்த சோணமுத்துவின் கனவில் காட்சியளிக்கும் முனியாண்டிசாமி இன்னொரு கோவிலைக் கேட்கிறது என்பதுடன் கதை நிறைவு பெறுகிறது. கட்டப்படும் புதிய கோவில் யாருக்கான கோவிலாக இருக்கின்றது என்கிற கேள்வியைக் கதையின் இறுதி சன்னமாக எழுப்புகிறது. இது தனக்கான கோவிலல்ல என எண்ணும் மனநிலைக்கான காரணமென்ன என்பதைக் கதை கேள்வியாகவே நம்முன் விட்டுவிடுகிறது.

 

இந்தத் தொகுப்பில் இருக்கும்  நவீனத்துவப் பாணி கதைக்கு நெருக்கமான கதையாக புலிச்சிலந்தி கதையைக் குறிப்பிடலாம். குடும்பச் சூழலின் காரணமாய் சிறுவயதில் தன்னை அன்பாகக் கவனித்துக் கொண்ட அத்தை வீட்டில் வளர்கிறாள் அகிலா எனப்படும் அகிலாண்டேஸ்வரி. நீரிழிவு நோயால் காலை இழந்து அத்தையைக் கவனித்துக் கொண்டே படிக்கின்றாள். அந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அகிலாவுக்குப் பாலியல் தொல்லைகளை மாமா தருகிறார். இதிலிருந்து தப்பி அம்மாவைக் காணச் செல்கின்ற போது, அங்கு அவள் இருக்கும் அவலச் சூழல் அத்தை வீடே மேலானது என்கிற எண்ணத்துக்கு அவளைத் தள்ளுவதாகக் கதை முடிகிறது. இந்த இருவேறு சூழலின் ஒப்பீடும் அதனால் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அகிலாவுக்கு இருப்பதைக் காட்டும் கதை மற்றொரு தளத்தில் கதையில் காட்டப்படும் அந்த அவலச் சூழலுக்கான காரணத்தைக் காட்டாமலே நிறைவு பெறுகிறது. 

கதையின் இறுதில் காணப்படும் அதிர்ச்சியான சம்பவம், இரண்டின் ஒப்பீடு, அதில் மேலான ஒன்றின் தேர்வு எனக் கதை மையம் ஒன்றை நிறுவி நகர்வது நவீனத்துவக் கதைப்பாணியைத் தொடர்கிறது. வைரத்தூசு என்கிற கதையும் கல்வியறிவும் அனுபவமும் இல்லாத்தால் நகரத்துக்குத் தன் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க வரும் இளம்விதவைத் தாயான பார்வதி நகரம், மருத்துவமனைச் சூழல் அளிக்கும் அந்நியத்தன்மையால் உணரும் பதற்றத்தையும் பரிதவிப்பையும் பேசுகிறது. அந்த அந்நியத்தன்மையால், தன் கூட்டுக்குள்ளே உள்ளொடுங்கி கொள்ள பார்வதி முடிவெடுக்கிறாள். வைத்திருக்கவும் முடியாமல் அகற்றவும் முடியாமல் தேங்கிப் போயிருக்கும் வைரத்தூசான அலட்சியத்தை அல்லது தனக்குள் உணர்கின்ற பாதுகாப்பைக் கதை பேசுகிறது.

இந்தத் தொகுப்பில், எனக்கு மிகவும் ஈர்ப்பான கதைகளாக அமைந்தவை கனவு, எல்லாமும் சரிதான் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். போதை வினியோகத் தொழில் ஈடுபட்டிருக்கும் தாயைக் காவல்துறையினர் கைது செய்த சூழலில் அவளின் தனித்துவமான கனவுகளால் கதையில் நிகழும் சம்பவங்களுக்குப் பொருளேற்றம் தரும் சிறுமியின் மனநிலையைக் கனவு கதை சித்திரிக்கிறது. ஒவ்வொரு கனவும் தாய் மீதான அவளின் பாசம், அவள் இருக்கும் சூழல் மீதான பயம் ஆகியவைச் சேர்ந்து தாயையே காவல் துறையிடம் காட்டிக் கொடுக்கச் செய்கிறது. சண்முகசிவாவின் கதைகளில் இருக்கும் மற்றொரு தன்மையாக அதில் இருக்கும் தலையீடற்ற படர்கைத் தன்மை அல்லது கதைசொல்லியின் கதைகூறலைக் குறிப்பிடலாம். கனவு கதையில் சிறுமியின் நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாத கதைசொல்லியின் குழப்பத்துடன் கதை முடிகிறது. அந்தக் குழப்பத்தை அவரவருக்கான நியாயம் என்கிற அளவில் கூட புரிந்து கொள்ளலாம். அதைப் போன்றே, எல்லாமும் சரிதான் கதையில் தனக்குப் பெரும் உதவி புரிந்த மருத்துவரின் மனைவியை உளவு பார்க்க செல்லும் நாகராஜு, அவளைப் பற்றி நல்ல விதமாய்ச் சொல்கிறான். அவரவருக்கான நியாயத்தைக் காட்டி எல்லாமே சரிதான் என்கிற மனநிலையை முன்னிலைப்படுத்துகிறது. ஒரு வகையில், நாகாராஜூவும் கனவு சிறுகதை சிறுமியும் தங்கள் அனுபவத்தாலும், உள்ளுணர்வாலும் தங்களுக்கு நியாயமான பக்கமொன்றைத் தேர்கின்றனர். இந்தச் சாமானியர்களின் மனதில் எழுகின்ற நியாயத்தராசின் சாய்வே இந்தக் கதைகளை முக்கியமானதாக ஆக்குகிறது. அந்த மேன்மை நிறுவுவதற்கு ஒரு சம்பவத்தை எடுத்துக் கொள்கின்றன.

துர்க்காபாய் கதையில், தமிழ் பெற்றோரால் வளர்க்கப்பட்ட சீனப்பெண்ணான துர்க்காபாய் மருத்துவமனை ஆயாவாக வேலை செய்கிறாள். சமூகநலத்துறையினரால் மருத்துவமனைக்கு அனுப்பப்படும் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான பதின்மூன்று வயது சிறுமியைத் தத்தெடுத்துக் கொள்கிறாள். அவள் காட்டும் இந்தக் கருணைக்குக் கதையில் அவளின் ஆதரவற்ற தன்மையும் சிறுமிக்கு நேர்ந்த அவலங்களும் மட்டுமே காரணங்களாகக் காட்டப்படுகின்றன. துர்க்காபாய் மேன்மையானவளாகக் கதை பதிவு செய்கிறது. அவளில் எழும் மேன்மை என்பது மனிதத்தின் சாட்சியாக அமைகிறது. 

வீடும் விழுதுகளும் தொகுதியிலே படித்த கதை ஒரு கூத்தனின் வருகை. இந்தக் கதையின் இறுதியிலும் மேன்மையானவராக ஒருவரைக் காட்டும் தன்மை இருக்கிறது. ஆனால், இந்தக் கதையில் கூத்து காட்டியாடும் முத்துசாமி தம்பிரான் எனும் கடைசித் தலைமுறைக் கூத்து கலைஞரில் வெளிப்படும் மேன்மையும் கம்பீரமும் கதையை நினைவில் தங்க வைக்கின்றது.

ஒட்டுமொத்தமாக, சண்முகசிவாவின் கதைகள் பார்வையாளரின் கோணத்தில் சம்பவங்களை எந்த முன்முடிவுமின்றி முன்வைக்கின்றன. சாமானியர்கள் எனக் கருதத்தக்க மனிதர்களில் எழும் மேன்மையான பக்கத்தைக் காட்டுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற