முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Better Call Saul தொடர்

 Better Call Saul தொடரைப் பார்த்து முடித்தேன். Breaking Bad தொடரின் prequel ஆன Better Call Saul இல் ஆறு பருவங்கள் அறுபத்து மூன்று எப்பிசோட்கள் கொண்ட நெடுந்தொடர்.  தான் வாதிடுகின்ற வாதிக்குச் சாதகமாக வழக்கை மாற்றியமைத்தும் ஆதாரங்களை மாற்றியமைத்தும் உடனடியாக வழக்கை நடத்தும் பெட்டிக்கடை வழக்கறிஞராகவே ஜேம்ஸ் மெக்கில் அறிமுகமாகிறான். அரிதாகவே மாற்றப்படும் நீதித்துறை விதிகளில்  தளர்வுகளை ஏற்படுத்திப் பேரம் பேசுகிறான்.  ஒருவகையில் அவனுடைய திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தாலே இதைச் செய்கிறான். தன் வழக்கறிஞர் சேவையைக் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்திக் கொள்வதன் மூலமாகச் சில்லறைக் குற்றங்களுக்கு வாதிடுகிறான். அவனுடைய முயற்சிகள் எதோ ஒருவகையில் மீள மீள தோல்வியுறுகின்றன. 

முழுமையாக விரும்பவோ அல்லது வெறுத்து ஒதுக்கவும் முடியாத இருமைத்தன்மை கொண்டவனான ஜேம்ஸ் மெக்கில் பாத்திரத்தில் Bob Odenkirk மிகச்சிறப்பாக நடித்திருந்தார். எல்லாவற்றையும் உடனே செய்து முடித்து விடத்துடிக்கும் அவசரமும் குறுக்கு வழி தேடும் இயல்பும் ஜேம்ஸ் மெக்கில்லின் இளவயதிலே அமைந்துவிடுகிறது. வழக்கறிஞரானப் பின்பும் அதனையே பின்பற்றுகிறான்.  அந்த இயல்பினாலே பல சிக்கல்களுக்கும் உள்ளாகிறான். 

ஒவ்வொரு சிக்கலிலிருந்து விடுபட்டு ஆயாசமாய் உணர்கின்ற போதும் இன்னொரு சிக்கலுக்கும் அவனே அறியாமல் உந்தி தள்ளுகிறது அவனது நிலைகொள்ளாத இயல்பு. ஒரிடத்தில் நிலையாகப் பணியாற்றுவதென்பது மெக்கிலால் முடியாததாக இருக்கின்றது.  

சில்லறை வழக்குகளை வாதிடுகின்ற ஜேம்ஸ் மெக்கில் சால் குட்மானாக ஆனதும் சட்ட நுணுக்கங்களைக் கொண்டு எல்லா குற்றங்களிலிருந்தும் வழக்குகளை வாதிட்டு வெல்கிறான்.  தன்னையறியாமல் அழிவு செயற்பாடொன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றான். மறுபக்கம், சட்ட வல்லுநரான மெக்கில்லின் அண்ணன் சார்ல்ஸ் தன் சட்ட நுணுக்கத் திறமையின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றான். அவன் அறிவின் மீதான அதீத நம்பிக்கையே எல்லாவற்றிலிருந்தும் அவனைத் தனித்திருக்கச் செய்யும் நோய்க்கும் காரணியாகிறது.

உள்ளூரத் தன் தம்பி மீது நம்பிக்கையற்றவனாகவும் அவன் திறமையால் சீண்டவும் படுகிறான். இருவரும் ஒருவரையொருவர் வீழ்த்த கைகொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இடையில் உள்ளூர அன்பு கொண்டிருக்கின்றனர். தான் நம்புகின்ற சட்டம் தன்னை முழுமையாய்க் கைவிடும் போது தனித்து விடப்பட்டவனாய் உணர்கின்ற சார்ல்ஸ் மரணத்தை நாடும் காட்சி அழுத்தமானதாக அமைந்திருந்தது. ஒவ்வொரு பிசகிலிருந்தும் வெளியேறுகின்ற ஜேம்ஸை அணைத்துக் கொள்ளும் கிம் வெக்ஸ்லர் பாத்திரமும் நன்றாக இருந்தது.


எதைச் செய்வது என்பதில் தொடங்கி செய்வதில் இருக்கும் அறமின்மை என மனத்தை உறுத்தும் தடுமாற்றங்களில் நிற்பவளை மெக்கில் வழிநடத்திச் செல்கிறான். மெக்கில் நிகழ்த்தும் குற்றங்களில் துணையாக நின்றதால் நேரும் குற்றவுணர்விலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள  அவனைப் பிரிகின்றாள். முற்றிலும் வேறான வாழ்க்கை வாழத் தொடங்கியப் பின்னரும், சால் குட்மன் ஜேம்ஸ் மெக்கில்லாக ஆகும் இறுதி நாடகீயத் தருணமொன்றில் அவனுடன் துணைநிற்க தயாராகின்றாள். இந்த உணர்ச்சி மிகு தருணங்களுக்கு இடையில் போதைத் தொழிலில் நிகழும் போட்டிகளும் விறுவிறுப்பும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. எதிலும் நேர்த்தியுடனும் கட்டுக்கோப்பாக இருப்பவராகப் படைக்கப்பட்டிருக்கும் குஸ்தாவோ, தான் ஈடுபட்ட போதைப் பொருள் குழுவினருக்கான பாதுகாப்பளிக்கும் தொழிலைத் தன் பேரக்குழந்தை காப்பதற்காக விடாமல் செய்யும் மைக்பாத்திரமும் சிறப்பாக இருந்தது. இறுதிப் பருவத்தில் நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பின்னரும் better call saul சிறப்பாகவே இருந்தது. 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...