முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Better Call Saul தொடர்

 Better Call Saul தொடரைப் பார்த்து முடித்தேன். Breaking Bad தொடரின் prequel ஆன Better Call Saul இல் ஆறு பருவங்கள் அறுபத்து மூன்று எப்பிசோட்கள் கொண்ட நெடுந்தொடர்.  தான் வாதிடுகின்ற வாதிக்குச் சாதகமாக வழக்கை மாற்றியமைத்தும் ஆதாரங்களை மாற்றியமைத்தும் உடனடியாக வழக்கை நடத்தும் பெட்டிக்கடை வழக்கறிஞராகவே ஜேம்ஸ் மெக்கில் அறிமுகமாகிறான். அரிதாகவே மாற்றப்படும் நீதித்துறை விதிகளில்  தளர்வுகளை ஏற்படுத்திப் பேரம் பேசுகிறான்.  ஒருவகையில் அவனுடைய திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தாலே இதைச் செய்கிறான். தன் வழக்கறிஞர் சேவையைக் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்திக் கொள்வதன் மூலமாகச் சில்லறைக் குற்றங்களுக்கு வாதிடுகிறான். அவனுடைய முயற்சிகள் எதோ ஒருவகையில் மீள மீள தோல்வியுறுகின்றன. 

முழுமையாக விரும்பவோ அல்லது வெறுத்து ஒதுக்கவும் முடியாத இருமைத்தன்மை கொண்டவனான ஜேம்ஸ் மெக்கில் பாத்திரத்தில் Bob Odenkirk மிகச்சிறப்பாக நடித்திருந்தார். எல்லாவற்றையும் உடனே செய்து முடித்து விடத்துடிக்கும் அவசரமும் குறுக்கு வழி தேடும் இயல்பும் ஜேம்ஸ் மெக்கில்லின் இளவயதிலே அமைந்துவிடுகிறது. வழக்கறிஞரானப் பின்பும் அதனையே பின்பற்றுகிறான்.  அந்த இயல்பினாலே பல சிக்கல்களுக்கும் உள்ளாகிறான். 

ஒவ்வொரு சிக்கலிலிருந்து விடுபட்டு ஆயாசமாய் உணர்கின்ற போதும் இன்னொரு சிக்கலுக்கும் அவனே அறியாமல் உந்தி தள்ளுகிறது அவனது நிலைகொள்ளாத இயல்பு. ஒரிடத்தில் நிலையாகப் பணியாற்றுவதென்பது மெக்கிலால் முடியாததாக இருக்கின்றது.  

சில்லறை வழக்குகளை வாதிடுகின்ற ஜேம்ஸ் மெக்கில் சால் குட்மானாக ஆனதும் சட்ட நுணுக்கங்களைக் கொண்டு எல்லா குற்றங்களிலிருந்தும் வழக்குகளை வாதிட்டு வெல்கிறான்.  தன்னையறியாமல் அழிவு செயற்பாடொன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றான். மறுபக்கம், சட்ட வல்லுநரான மெக்கில்லின் அண்ணன் சார்ல்ஸ் தன் சட்ட நுணுக்கத் திறமையின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றான். அவன் அறிவின் மீதான அதீத நம்பிக்கையே எல்லாவற்றிலிருந்தும் அவனைத் தனித்திருக்கச் செய்யும் நோய்க்கும் காரணியாகிறது.

உள்ளூரத் தன் தம்பி மீது நம்பிக்கையற்றவனாகவும் அவன் திறமையால் சீண்டவும் படுகிறான். இருவரும் ஒருவரையொருவர் வீழ்த்த கைகொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இடையில் உள்ளூர அன்பு கொண்டிருக்கின்றனர். தான் நம்புகின்ற சட்டம் தன்னை முழுமையாய்க் கைவிடும் போது தனித்து விடப்பட்டவனாய் உணர்கின்ற சார்ல்ஸ் மரணத்தை நாடும் காட்சி அழுத்தமானதாக அமைந்திருந்தது. ஒவ்வொரு பிசகிலிருந்தும் வெளியேறுகின்ற ஜேம்ஸை அணைத்துக் கொள்ளும் கிம் வெக்ஸ்லர் பாத்திரமும் நன்றாக இருந்தது.


எதைச் செய்வது என்பதில் தொடங்கி செய்வதில் இருக்கும் அறமின்மை என மனத்தை உறுத்தும் தடுமாற்றங்களில் நிற்பவளை மெக்கில் வழிநடத்திச் செல்கிறான். மெக்கில் நிகழ்த்தும் குற்றங்களில் துணையாக நின்றதால் நேரும் குற்றவுணர்விலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள  அவனைப் பிரிகின்றாள். முற்றிலும் வேறான வாழ்க்கை வாழத் தொடங்கியப் பின்னரும், சால் குட்மன் ஜேம்ஸ் மெக்கில்லாக ஆகும் இறுதி நாடகீயத் தருணமொன்றில் அவனுடன் துணைநிற்க தயாராகின்றாள். இந்த உணர்ச்சி மிகு தருணங்களுக்கு இடையில் போதைத் தொழிலில் நிகழும் போட்டிகளும் விறுவிறுப்பும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. எதிலும் நேர்த்தியுடனும் கட்டுக்கோப்பாக இருப்பவராகப் படைக்கப்பட்டிருக்கும் குஸ்தாவோ, தான் ஈடுபட்ட போதைப் பொருள் குழுவினருக்கான பாதுகாப்பளிக்கும் தொழிலைத் தன் பேரக்குழந்தை காப்பதற்காக விடாமல் செய்யும் மைக்பாத்திரமும் சிறப்பாக இருந்தது. இறுதிப் பருவத்தில் நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பின்னரும் better call saul சிறப்பாகவே இருந்தது. 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற