முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 நேபாளப்பயணம் 11

பெளத்தநாத் ஸ்தூபி அமைந்திருக்கும் பகுதியிலே இருந்த சீனபாணி கடையொன்றில் வாத்துகறி சாப்பிட்டோம். நாளைக்குச் சென்று பார்க்கவிருக்கும் குமாரி கோவிலின் தலேஜு தெய்வத்தின் இஷ்டதேவதையான பத்ரகாளியம்மன் ஆலயமும் நபராஜைச் சந்திக்கவிருக்கும் பீர்குடி பகுதியில்தான் இருப்பதாகத் தெரிந்தது. அங்குச் செல்வதற்கு உள்ளூரில் பிரபலமாக இருந்த பாத்தோவ் எனப்படும் வாடகைக்காரை எடுக்கக் கைப்பேசியில் செயலியைப் பதிவிறக்கம் செய்தேன். உள்ளூர் எண்ணிருந்தால் தான் அதைப் பதியமுடியும் எனக் கடையில் வேலை செய்யும் பணியாளர் குறிப்பிட்டார். நாங்கள் தமிழர்கள் என்பதும் தமிழ் மொழியில் பேசுகிறோம் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. கடை முதலாளி என்னை அனுமதித்தான், முச்சந்தி வரையில் வந்து உங்களைக் காரிலேற்றிவிட்டு வந்திருப்பேன்….ஆனால், கடையைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை என்றார். ஆனாலும், என் கைப்பேசியை வாங்கி செல்ல வேண்டிய இடத்தைப் பதிவு செய்து ஓட்டுநருக்கும் அழைத்துச் சொல்லி எங்களை முச்சந்தியில் நிற்கச் சொன்னார். மிக நன்றாக ஆங்கிலம் பேசியவரிடம் நன்றியைக் குறிப்பிட்டு விடைபெற்று முச்சந்திக்கு ஓடினோம்.


                                        காட்மாண்டு புறநகர் பயணம்

நேபாளின் கார் எண்கள் நீளமாகவும் ஓரே மாதிரியாகவும் இருந்ததால் காரைக் கண்டுபிடிக்க சிரமமாக இருந்தது. காரிலேறியப் பின் சந்துகளில் கார் சென்று கொண்டிருந்தது. ஒட்டுநரும் விடாமல் யாரிடமோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். சொன்ன இடத்துக்குத்தான் செல்கிறாரா எனச் சந்தேகமாக இருந்தது. நகரின் மையத்தைத் தாண்டி சாலையோரத்தில் இறக்கிவிட்டு 480 ரூபாய் பயணத்துக்கு 510 ரூபாய் வாங்கி கொண்டு வலப்புறம் கைகாட்டிவிட்டுச் சென்றார். அவர் சொன்ன இடத்தில் கோவிலொன்று இருந்தது. அந்தக் கோவில்தான் பிர்குடி பத்ரகாளி கோவில். கோவில் கருவறை சென்று பக்தர்களே பூசை செய்யும் வழக்கத்தை நேபாளின் பல கோவில்களிலும் காணமுடிகின்றது. இங்கேயும் குங்குமம் சகிதமாகவே காளிதேவி வீற்றிருந்தாள்.  கோவிலின் பழமைக்கு அடையாளமாய் பெரிய மணியொன்று கோவில் இருந்தது.



நேபாளில் இருக்கும் சக்திபீடங்களில் பீரிகுடி பத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. அந்தக் கோவிலின் பின்னால், திருமணச் சடங்கொன்று நடந்து கொண்டிருந்தது. மணமகன் மணமகளைத் தூக்க முயன்று கொண்டிருந்தார். மணமகள் கையளிப்புச் சடங்கென நினைத்தேன். அதனைப் படமெடுக்க முயன்றேன். அங்கிருந்தவர்களில் வேண்டாமென்பதைப் போல கையசைத்தார். தலையசைத்து பின்னாலில் திரும்பி கொண்டேன். நபராஜ் கோவிலுக்குப் பின்புறமிருந்து வந்தார். இப்பொழுது ஓரளவு மலாயை நன்றாக்ப் பேசினார். எங்களைப் பார்த்ததிலிருந்து மலேசியாவுக்கு திரும்ப வேண்டுமென்ற என்ற எண்ணம் வேரூன்றியிருக்க வேண்டும். எனக்கு மலேசியா வேண்டும் என மலாயில் சொல்லிக் கொண்டிருந்தார். புத்தர், தாரா சிலைகளை விலை மலிவாக வாங்க எதாவது இடம் அருகிலிருக்கிறதா என நவீன் கேட்டார். சிலையென்பதை மலாயிலும் ஆங்கிலத்திலும் எவ்வளவு சொல்லியும் நபராஜுக்குப் புரியவில்லை. அவர் கடை வைத்திருக்கும் பீரிகுடி சந்தைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். ஆரஞ்சு நிற தார்பாலின் கூரையிடப்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள் இருந்தன. வெய்யிலில் இருந்து இறங்கி நீலநிற மேற்கூரை அமைந்திருந்த கடைப்பகுதிக்குச் சென்றோம். சேலைகள், சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் விலை மலிவான காலணிகள், சட்டைகள் நிறையவே காணப்பட்டன. அம்மாதிரியான கடையொன்றைத்தான் நபராஜ் நடத்திக் கொண்டிருந்தார். உடல் மொழி காட்டியும் நபராஜால் புரிந்து கொள்ள முடியாததால் இணையத்தில் சிலையைக் காட்டிக் கேட்டோம். அவரின் மனைவி, தம்பி ஆகியோரிடம் பேசி இன்னொரு பகுதியைக் குறிப்பிட்டார். அங்கும் இருக்கும் என்பது உறுதியில்லை என்றவுடன் அவரின் மீது சந்தேகமெழுந்தது. நாங்கள் தங்கியிருக்கும் தாமேல் பகுதியில் இருக்கும் கடையில் சிலைகளை விலை குறைத்து வாங்கி தர உதவ முடியுமா எனக் கேட்டேன். ஆமாம் என்றதும் எங்களுடனே காரில் வந்தார். அவருடைய அண்ணன், தம்பி எனக் குடும்பமே அங்கு கடை வைத்திருந்தது தெரிந்தது.



அங்கிருந்து செல்வதற்கு முன்னர் நேற்று கொடுத்ததைப் போல இன்னொரு தலையணை கிடைக்குமா எனக் கேட்டார். அவருடைய மகளுக்கும் மகனுக்கும் அதனால் சண்டை வருகிறதென்றார். விளையாட்டுப் பொருட்களுக்காக பிடிவாதமிருந்து ஆர்வமாக வாங்கி பிறகு இன்னொரு பொருளைத் தேடிப் போகும் இயல்பு சிறுவர்களிடம் இருப்பதை நினைவு கூர்ந்தேன். நபராஜ் பேச்சில் வியாபாரியின் நுணுக்கமோ வாடிக்கையாளரின் சாமர்த்தியமோ தெரியவில்லை. அதைப் போலவே கடைகளுக்குச் சென்றதும், நாங்கள் பேரம் பேசியத் தொகையிலிருந்து கூடுதலாகவே நபராஜ் சொல்கிற வியாபாரிகள் தந்தனர். அவரை அங்கிருந்து அனுப்ப வேண்டி எதையாவது பொய் சொல்ல தயங்கி கொண்டிருந்தோம். அவரும் மலேசியா வேண்டும் என மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். அத்துடன், அன்றிரவு அல்லது மறுநாள் காலையில் எதாவது மது விருந்துக்குச் செல்ல நவீனைப் பலமுறை அழைத்துக் கொண்டிருந்தார். நானே, ஒவ்வொரு கடையிலும் விலையைக் குறைத்துப் பேரம் பேசிக் கொண்டிருந்தேன். கடைக்காரர்கள் சொல்கிற விலையிலிருந்து குறைந்த விலையைக் குறிப்பிட்டு எனக்கு தெரிந்த ஒரே ஆங்கிலச் சொல் அதுமட்டும்தான் என்பதைப் போல அதையே மீண்டும் மீண்டும் சொல்லிப் பொருட்களை வாங்கினேன்.  நவீன், வேடிக்கையாக நபராஜிடம் நீ மலேசியாவுக்கு வந்துவிடு அரவின் இங்கேயே நேபாளப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளட்டும் என்றார். எப்படியோ ஒருவழியாக நபராஜை அனுப்பி வைத்தோம். நபராஜ் மலேசியாவுக்குச் செல்லும் ஆவலில் எங்களைத் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தார்.  அவர் சென்றதை உறுதி செய்த பின்னர் மற்ற கடைகளுக்குச் சென்று மீதியிருந்த பணத்தில் ஒரு நாள் தேவைக்கு மட்டும் மிச்சம் வைத்து மற்றதைக் கொண்டு பொருட்கள் வாங்கினோம்.



அன்றிரவு எங்களுக்கான பிரியாவிடை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த தங்கும் விடுதியிலிருந்து பத்து நிமிடத் தொலைவில் விருந்து நடைபெறும் விடுதிக்கு நடந்தே சென்றோம். போக்கராவில் வாங்கிய கூர்க்கா பாணி ஆடைகளை அணிந்து சென்றோம். அங்கு சென்றமர்ந்தவுடன் அனைவரின் மேசை மீது சிறிய அகல்விளக்கு போன்ற குவளையை வைத்திருந்தார்கள். அதில் நீண்ட கெண்டியை மேலேற்றி மேசையில் சிறிதும் சிந்தாமல் ராக்சி எனப்படும் உள்ளூர் சாராய வகையை ஊற்றிச் சென்றாள் பெண்ணொருத்தி. அதை வேண்டாமென மறுக்கக்கூடாதென நவீன் சொன்னார். ராக்சி என்பது நேபாளில் கிடைக்கும் குதிரைவாலி அரிசி, சோளம், அரிசி போன்ற தானிய வகைகளை நொதிக்கவைத்துச் செய்யப்படும் சாராய வகை என சுரேஷ் குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களே சோளச்சாராயத்தைக் காய்ச்சுகின்றனர் என  குறிப்பிட்டார். கடும் நெடி வீசிய சாராயம் தொண்டையில் இறங்கியதும் எரிச்சலான ஏப்பம் எழுந்தது.  பின்னர், டால் பாட்டின் ஒவ்வொரு வகையும் ஒன்றொன்றாக எடுத்து வரப்பட்டுப் பரிமாறப்பட்டது. டால்பாட் எனத் தெரிந்ததும் எல்லாரின் முகத்திலும் ஏமாற்றத்துடன் கேலியான குரலெழுந்தது. நாங்கள் ஆவலாக எதிர்பார்த்த உள்ளூர் நடன வகைகள் ஆரம்பமாக இருந்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற