2015 ஆம் ஆண்டு முகநூலில் தொடர்ச்சியாக எழுத்தாளர்கள் ம.நவீன், பாலமுருகன் ஆகியோர் எழுதிய பதிவுகளின் வாயிலாகவே ஜகாட் படத்தைப் பார்க்கும் உந்துதல் எழுந்தது. என்னுடைய நண்பர்கள் பலருக்கும் மலேசியப் படத்தைத் திரையரங்கில் பார்ப்பதில் தயக்கமிருந்தது. எனக்கும் கூட ஒரிரண்டு மலேசியப்படங்களைத் திரையரங்கில் பார்த்த கசப்பான அனுபவங்கள் இருந்தன. ஆனால், ஜகாட் படத்தின் முன்னோட்டம் , போஸ்டர் வடிவமைப்பு, படத்தையொட்டி வெளியீடப்பட்ட பாடல் ( ஜகாட்ன்னா நல்லா பையன் ) எல்லாமே அது வரையில் நான் பார்த்திருந்த மலேசியப் படங்களைக் காட்டிலும் வித்தியாசமான படமாக ஜகாட் இருக்குமென்ற எண்ணத்தை உருவாக்கியது. அதோடு, மலேசியாவில் தமிழர்கள் மத்தியில் அதிகளவு புழங்கி தமிழ்மயப்பட்டுவிட்ட சொற்களில் ஜகாட் என்பது முக்கியமானது. ''அவன் ரொம்ப ஜகாட் புடிச்சவன், ஜகாட் காக்கி, ஜகாடானவன்'' என மிகச் சாதாரணமாக கொஞ்சம் அடாவடியான அல்லது ஒழுங்குகளைப் பின்பற்றாதவர்களைச் சுட்ட மிக இயல்பாக மலேசியத் தமிழர்களிடம் புழங்கிய சொல் அது. இப்படியாக, படத்தின் தலைப்பே மலேசியத் தமிழர்களின் வாழ்வியலுடன் நெருங்கியத் தொடர்பிருப்பதை உணர்த்தியது. ...
மலேசியாவில் தேசிய இலக்கியவாதி என்னும் விருதே இலக்கியத்துக்காக அளிக்கப்படும் உயரிய விருது. இந்த விருதைப் பல எழுத்தாளர்கள் பெற்றிருந்தப்போதிலும் எழுத்தாளர் அ.சமாட் சைட்டே தேசிய இலக்கியவாதியாக பெருமளவில் நினைவுக்கூரப்படுவராக இருக்கிறார். அதற்கு முதன்மையான காரணம் இலக்கியத்துறைச் செயற்பாடுகளைத் தாண்டியும் சமாட் சைட்டின் செயற்பாடுகள் விரிந்திருப்பதே எனலாம். ( தமிழ்விக்கிப் பதிவு ) இலக்கியச் செயற்பாடுகளைத் தாண்டி அறிவியல், கணிதப்பாடங்கள் ஆங்கிலமொழியில் கற்பிக்கப்படும் முடிவை எதிர்க்கும் போராட்டம், தேர்தல் அரசியல் சீர்திருத்தம் கோரிய பெர்சே பேரணி எனப் பல போராட்டங்களை அ.சமாட் சைட் முன்னெடுத்திருக்கிறார்;பங்கெடுத்திருக்கிறார். அவருடைய முதல் நாவலான சலினா 1958 ஆம் ஆண்டு எழுதப்பட்டு 1961 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. சலினா நாவல் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சிங்கப்பூரைக் களமாகக் கொண்டது. இந்தியத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பொதுப்பணித்துறைக் குடியிருப்பொன்றின் அடுத்து இருக்கும் ஆட்டுக்கொட்டகைகளை அறைகளாகத் தடுத்து உருவாகியிருக்கும் கம்போங் கம்பிங் (ஆட்டுக் கம்பம்) தான் சலினா ந...