முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம்

யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன்.

மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை  பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான  ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்றைத் தொகுத்துக் கொள்ள முடிந்தது.

 
செளந்தர்

1. முதலாவதாக, யோகப்பயிற்சியென்பதை உடல், உயிராற்றல், மனம், ஆழ்மனம், ஆன்மீகம் ஆகியவற்றுக்கான பயிற்சியாகக் காணலாம்,

2. இரண்டாவதாக யோகத்தை அறிவுத்துறையாக அணுகுகின்ற வகையில், யோகம் சொல்லும் மனித உடற்கூறுகளை அவதானித்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாகுபாடுகள், ஆசனங்களையும் தெளிவுப்படுத்தினார்.

3. மூன்றாவதாக, யோகத்தின் இன்றியமையாமையை நிறுவ எந்தவகையிலும் மற்ற பயிற்சிகளான நவீன மருத்துவம், அறிவியல், வணிக நோக்கிலான எளிய யோகப்பயிற்சிகள் ஆகியவற்றை நிராகரித்தலும் மறுத்தலும் கூடாது.  யோகத்தின் மகிமையைச் சொல்லும் உறுதிபடுத்தப்படாத போலி அறிவியல் தகவல்களையும் (        Pseudo Science) முற்றாகவே ஒதுக்கினார்.

4. நான்காவதாக, அவருடைய பதிலிலும் அணுகுமுறையிலும் நவீனமான மொழியும் முறையும் இருந்தாலும், அவர் முன்வைத்த பயிற்சிகள், மரபு ஆகியவற்றுக்குப் பின் முதன்மையாக இருப்பது யோகத்தை வாழ்க்கைமுறையாக ஆக்கிக் கொள்ளும் ஒழுங்குத்தான். அந்த ஒழுங்கை எந்த குறுக்குவழிகளின் வாயிலாகவும் எளிமைப்படுத்தல்களின் மூலமாகவும் அறிந்து கொள்ள முயலும் உடனடி வழிகளையும் மென்மையான மொழியில் உறுதியாகவே ஒதுக்கினார்.

5. ஐந்தாவதாக, அடுத்தடுத்த பயிற்சிகள் என்பது அளிக்கப்பட்ட பயிற்சிகளைச் சாதகம் செய்து உடல்பெறும் எதிர்வினைகளை அவதானிப்பதன் மூலமாய் அறிந்து கொள்ளலாம்.

அவரளித்த பயிற்சிகளை நான்கு மாதங்களில் சில நாட்கள் நீங்கலாக தொடர்ந்து செய்து வந்தேன். இரண்டாவது பயிற்சியையும் ம,நவீன் ஒருங்கிணைத்த போது அதிலும் ஆர்வத்துடன் பங்கெடுத்தேன். கடந்த 25, 26, 27 மே மாதத்தில் இரண்டாம் கட்ட யோக முகாம் கூலிம் பிரம்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடந்தது. நாடு தழுவில் நிலையில் 130 பேர் கலந்து கொண்டனர். மறுபடியும் செளந்தரைப் பார்த்ததும் அரவணைப்பும் செல்லமான தட்டலுமாய் மகிழ்ச்சியான மூன்று நாட்கள் கற்றல் தொடங்கியது.


சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

வழிகாட்டல் காணொளிகள் அளிக்கப்பட்டிருந்தாலும் சில மாதங்களில் பயிற்சிகளைத் தனியே செய்து  உடல் அசைவுகள், மூச்சுப்பயிற்சிகள் எனப் பலவற்றையும் எளிமைப்படுத்தித் தொடர்ந்திருப்பது இரண்டாம் கட்ட முகாமில் பயிற்சிகளை மறுபடியும் செய்யும் போதே தெரிந்து கொண்டேன். சில அறிந்த பயிற்சிகளைக் கொண்டிருந்தாலும் இன்னொரு புதிய தொடக்கமாகவே முகாம் அமைந்திருந்தது. 

இந்த முகாமில் பத்து விதமான ஆசனங்களும் மூச்சுப்பயிற்சிகளும் விரிவாகவே சொல்லிக் கொடுத்தார். கற்றுக்கொடுக்கப்பட்ட ஆசனங்களை மீண்டும் மீண்டும் செய்ய வைத்து அந்த ஒழுங்கை ஏற்படுத்த முயன்றார். மனதுக்கினிய சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியும் முகாமில் உடன் இணைந்து கொண்டார். ஒவ்வொரு பயிற்சி முடிவிலும் உடலை நெட்டி முறித்து இயல்பாக்குவதைப் போல சுவாமியும் அருகிருந்து கேலிகளால் நெகிழ்வாக்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு அமர்வின் போதும் உடற்கூறுகள், பயிற்சிகளின் பின்னணி, யோகத்தத்துவம் என விரிவாகவே தெளிவுபடுத்தினார். சற்றே நீண்ட நேரம் கண்களை மூடிச் செய்யும் பயிற்சிகளில் பிசகி ஓடும் கவனத்தைப் பிடித்து நிறுத்தும் பிரயத்தனத்தில் ஆழ்ந்தேன். ஆசனங்கள் தரும் அழுத்தத்தில் வயிறு, முதுகு, கால்களில் இருந்த அசைவுகளைக் கவனித்தேன். மூன்று நாட்களுக்குள் உடல் மீது அவதானம் உருவாகி வந்திருந்ததை உணர முடிந்தது.

மகிழ்ச்சி இல்லாமல் கற்றல் இல்லை என ஜெ குறிப்பிடுவதைப் போல மிக மகிழ்வான மூன்று நாட்களில் நல்ல கற்றலனுபவம் நடந்த நிறைவை முகாம் அளித்தது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...